Close

படகு இல்லம்

படகு போட்டி 

தேதி
நேரம்
இடம்
22-05-2024 10.00 A.M – 12.00 P.M படகு இல்லம்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் படகு இல்லத்தின் மூலம் ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு ஏற்காட்டு ஏரியில் இதமான படகு சவாரியை வழங்கி வருகிறது. சுற்றுலாப் பணிகளில் படகு சவாரிக்கு என மிதிபடகு, துடுப்பு படகு, இயந்திர படகு மூன்று வகையான படகு சேவையை வழங்கி வருகிறோம்.

படகு இல்லத்தில் மொத்தம் 60 படகுகள் இயங்கி வருகிறது. படகுகளுக்கான சவாரி கட்டணங்களில் விவரங்கள்:.

1.மிதி படகு – இரு நபர்கள்- ரூபாய் 200/-

2. மிதி படகு- நான்கு நபர்கள்- ரூபாய் 300/-

3. துடுப்பு படகு-மூன்று நபர்கள்- ரூபாய் 200/-

4. துடுப்பு படகு -ஐந்து நபர்கள்.-ரூபாய் 300/-

5. இயந்திர படகு- எட்டு நபர்கள்- ரூபாய் 700/-

படகு இல்லத்தில் பயணிகள் சுலபமாக முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் https://ttdc.in/ இணைதளமான மூலம் ஆன்லைன் முன்பதிவு திட்டமும் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் உயிர் காப்பு ஆடை அளிப்பதுடன் அவற்றை முறையாக பின்பற்ற மீட்பு படகு மூலம் ஏரியில் ஆய்வு படகு சவாரி நேரங்களில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு அளித்து வருகிறோம்.

வருகின்ற 22.05.24 தேதி ஏற்காட்டில் நடத்தி இருக்கும் 47 வது ஆண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பாக ஏரியில் சுற்றுலா பயணிகள் இடையான படகு போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

Location :