Close

நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகள்

கோட்டை மாரியம்மன் திருவிழா:
ஜுலை-ஆகஸ்ட் மாதங்களில் (தமிழ் ஆடி மாதம் ) தமிழ்நாட்டில் மாரியம்மன் திருவிழாக்கள் பரவலாக நடைபெறும். சேலத்தில் ஒரு வாரகாலமாக நடைபெறும் கோட்டை மாரியம்மன் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகவும் பெருவாரியான மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

மலையாளி கோவில் விழா:
ஏற்காட்டிலில் உள்ள சேர்வராயன் காவேரியம்மன் கோவிலில் வருடாந்திரம் மே மாதத்தில் கொண்டாடப்படும் விழாவானது மிகவும் பிரசித்தி பெற்றதாகவும் ஆயிரக்கணக்கான மலையாளிகள் கலந்துகொள்ளும் சிறப்பான பண்டிகையாகவம் விளங்குகிறது.

ஆடிப்பெருக்கு விழா:
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட்(ஆடி) மாதத்தில் ஆடிப்பெருக்கு விழா மேட்டூரிலும், கவேரி நதிக்கரை ஓரங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது

ஏற்காடு கோடை விழா:
ஒவ்வொரு வருடமும் மே மாதம் கடைசி வாரம் ஏற்காட்டில் கொண்டாடப்படும் கோடை விழா ஒரு முக்கியமான விழாவாகும். இதில் நடைபெறும் , மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி, படகு போட்டி போன்றவற்றில் உள்ளூர் மற்றும் வெளியூர் பார்வையாளர்கள் பங்கெடுத்துகொள்வார்கள். மேலும் தினசரி நடைபெறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், நாடகங்கள் பெருவாரியான மக்களை ஈர்க்கும் போழுதுபோக்கு நிகழ்ச்சிகளாகும்.

  • KottaiMariamman Temple Festival image

    KottaiMariamman Temple Festival

  • Yercaud Summer Festival image

    Yercaud Summer Festival

  • Adiperukku Festival image

    Adiperukku Festival